Friday, September 19, 2008

kanner anjali - காதலுக்கு கண்ணீர் அஞ்சலி -ps kavithaikal







சிரித்து பேசி
சிணுங்கியதும்
சில்லென துவங்கிய என் காதல்
சிறகிழந்த பறவையாய் இன்று!

என் வாழ்வில் ஆச்சரிய குறியாய் இருந்து
பின் கேள்வி
குறியாய் மாறிய காதலுக்கு
நேற்று வைத்து விட்டேன் முற்று புள்ளி.

காதல் மாயையா இல்லை
எது காதல் என்ற அறியாமையா?

காதலை கொன்ற
கொலை காரி அவள்

இ.பி.கோ வில் இடமில்லையாம்
இரக்க மற்றவளை தண்டிக்க!!

கோபம் இல்லை
பாவமாய் இருக்கிறது அவளை பார்த்தால்…

இதயம் இல்லாதவள் அவள்
இரக்கத்தை எதிர்பார்த்தது என் தவறு

மனிதாபிமானம் உள்ளவன் நான்
மன்னித்து விடுகிறேன் அவளை

வாழ்த்துகிறேன் அவள் வாழ்வு சிறக்க!!


தோல்விதான் எனினும்
சோகமில் லை
சுமை நீங்கியதால்
சுகமே

நேற்று அகால மரணமடைந்த
என் காதலுக்கு
கண்ணீர் அஞ்சலி

என் கடந்த காதல் பயணம்
கடும் தோல்வியில் முடிந்தது
அடுத்த பயணம்
அபார வெற்றி பெற வேண்டிகொள்ளுங்கள்
அவரவர் இஷ்ட தெய்வங்களை

இப்படிக்கு,
நான்

*Book mark this site for more tamil poems , Updating every week!!!

Tuesday, May 27, 2008

நான் கடவுள் - ps kavithaikal













நான் யார்?
கவிதைகள் புனைவதால் கவிஞ னா?
காதல் புரிவதால் காதலனா?
மனிதனாய் நன்றாக நடிப்பதால் நடிகனா?
ஆசைக்கு அடிமையானதால் மிருகமா?

குழப்பமான கேள்விக்கு
விளக்கமாக விடை தேடினேன்…

இறுதியில் தெரிந்து கொண்டேன்
இறைவன் நானென்று

ஆணவக்காரன் என அவமதித்தாலும்
பைத்திய காரன் என பரிந்துரை செய்தாலும்
பயப்பட மாட்டேன்…

மதிக்க மாட்டேன்
மதி கெட்டோர் வார்த்தைகளை…..

முடிந்தால்
முயற்சி த்து பாருங்கள்
கிடைத்தாலும் கிடைக்கலாம்
உங்களுக்கும் அந்த இறைவனை……….


*Book mark this site for more tamil poems , Updating every week!!!

என்ன கொடுமை சார் இது? - ps kavithaikal
















சிறையில் உள்ள உறவினர்
எப்பொழுது வருவார்
கேட்டனர்…
ஜொசியக்கிளியிடம் ….

*Book mark this site for more tamil poems , Updating every week!!!